திருக்குறள்

509.

தேறற்க யாரையுந் தேராது தேர்ந்தபின் தேறுக தேறும் பொருள்.

திருக்குறள் 509

தேறற்க யாரையுந் தேராது தேர்ந்தபின் தேறுக தேறும் பொருள்.

பொருள்:

நன்கு ஆராய்ந்து தெளிந்த பிறகு ஒருவரிடம் நம்பிக்கை வைக்க வேண்டும் ஆராய்ந்து பாராமல் யாரையும் நம்பிவிடக் கூடாது.

மு.வரததாசனார் உரை:

யாரையும் ஆராயாமல் தெளியக்கூடாது, நன்றாக ஆராய்ந்த பின்னர் அவரிடம் தெளிவாகக் கொள்ளத்தக்க பொருள்களைத் தெளிந்து நம்ப வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:

எவரையும் ஆராயாமல் பதவியில் அமர்த்த வேண்டா; ஆராய்ந்த பிறகு தேர்ந்தவற்றின்மேல் சந்தேகம் கொள்ளவும் வேண்டா.